Latest Posts

24/8/12


read more...

27/6/10

என்னை என்ன செய்தாய்?


நான் நானாக தான்
இருந்தேனே எப்போது
என்னை நீயாக
மாற்றினாய் ?


என்னை என்ன செய்தாய்
எப்போதும் என் நினைவுகள்
உன்னை சுற்றியே
வருகின்றன

விலகி நிற்க நினைக்கிறேன்
முடியாமல்
மீண்டும் மீண்டும்
மனம் உன்னையே தேடுகிறதே
என்னை என்ன செய்தாய்?


மறந்து போனேன்
என்னை நானே
தொலைந்து போனேன்
எனக்குள் நானே ...
தேடித் தேடிப் பார்த்தேன்
கிடைத்தது
நானல்ல நீ தான்
என்னை என்ன செய்தாய் ?

பசி மறந்தேன்
உறக்கம் மறந்தேன்
இரவின் நீளம் சுமையானது
பகலில்
நேரம் போதவில்லை
உன்னை நினைப்பதற்கு ....
என்னை என்ன செய்தாய் ?

உன் பெயரை மட்டும்
திரும்ப திரும்ப
சொல்லிப் பார்த்து
மனம் தித்திக்கிறதே
உன் பெயரை சொல்லி
என்னை யாராவது அழைக்க
மனம் விரும்புகிறதே
என்னை என்ன செய்தாய் ?

விழித்துக் கொண்டே
தூங்குகிறேன்
விழிகள் இருந்தும்
பார்வை அற்றவள் ஆனேனே
என்னை என்ன செய்தாய் ?

என் இதயத்தில்
ஊஞ்சல் போட்டு ஆடிக்கொண்டிருப்பது
நீயும் உன் நினைவுகளும்
மட்டும் தான்

என்னை என்ன செய்தாய்
சொல் என்னை

என்ன செய்தாய் ?















read more...

19/6/10

பெண்களும் சேலையும்

சமீபத்தில் ஒரு திருமண வைபவம் ஒன்றிற்கு சென்றிருந்தேன் அங்கே என் அருகே இருந்த இருவரின் உரையாடலை கேட்ட முடிந்தது என்னால் அவர்கள் பேசிக்கொண்டது சேலை பற்றி எல்லோருமே சிக்குஜின்ஸ் சாரீயே கட்டுவதால் இவர்கள் வேறு புதிய பாசன் சேலை கட்டுவது என பேசிக்கொண்டிருந்தார்கள் , இங்கிருக்கும் பல பெண்கள் ஒரு வைபவத்திற்கு கட்டும் சேலை வேறு வைபவங்களிற்கு கட்டுவதில்லை ஒரு தடவை கட்டினால் அது பழையதாகி விடும் அடுத்த வைபவங்களிற்கு புதிதாக வாங்கிக் கொள்வார்கள் , ஒரு மாதத்தில் நான்கு வைபவம் வந்து விட்டால் கணவர்களின் நிலைதான் என்ன? நல்லகாலம் இவர்கள் சேலைக்கு பொருத்தமாக போலி நகைகளை அணிகின்றார்கள் அதுவே பொருத்தமாக தங்க நகைகள் தான் அணிய நேர்ந்திருந்தால் புலம்பெயர் நாடுகளில் நிறைய தமிழ் பிச்சைக்காரர்களை கண்டிருக்க கூடும்

இதில் நகைச்சுவை என்ன என்றால் பல பெண்களுக்கு சேலை கட்டவே தெரியாது வேறு ஒருவர் தான் கட்டி விட வேண்டும் , வேறு ஒருவர் சேலை கட்டிவிட அவர்கள் கட்டும் பந்தா இருக்கிறதே .... அட அட ....

நான் வைபவங்களிற்கு சேலை கட்டிச் சென்றால் சிலர் கேட்பதுண்டு சேலை நீங்கள் தான் கட்டிநிங்களா? உங்களுக்கு கட்ட தெரியுமா? என்று நானும் எங்கே எனக்கு சேலை கட்டவே தெரியாது என்று நினைத்து விடுவார்களோ என்ற பயத்தில் பெரிதாக தலை ஆட்டிக் கொள்வதுண்டு பிறகு எதாவது நிகழ்ச்சிக்கு செல்லும் பொது அவர்களுக்கு சேலை கட்டிவிடக் கேட்டும் பொது தான் விளங்கும் ஆஹா இவர்கள் அவர்களுக்கு கட்டி விடுவதற்க தான் இப்படி கேட்டார்களா என்று இப்ப எல்லாம் யாராவது சேலை கட்ட தெரியுமா என்றால் இல்லை என்றே சொல்லிவிடுவது ...

இந்த சேலை பற்றி பேசும் போது பழைய சம்பவம் ஒன்று நினைவு வருகிறது
சுமார் 10 வருடங்களின் முன்பு எங்கள் உறவுக்காரர் ஒருவருக்கு திருமணம் அதற்கு நாங்கள் வெளிக்கிடும் போது பெரியம்மாவிற்கு சேலை கட்ட உதவி செய்தது என் தங்கை எதோ இருவரும் முட்டி மோதி சேலை கட்டிக் கொண்டார்கள்.. சேலை கட்டி முடிந்ததும் பெய்யம்மா சொன்னார் " என்னடி சேலை சின்னதா இருக்கு" என்று அதற்கு என் தங்கை " உங்களுக்கு இரண்டு சேலையை சேர்த்து கட்டினாலும் சின்னதா தான் இருக்கும் " என்றால் பெரியம்மா சற்று உடல்பருமன் ஆனவர்.பெரியம்மாவோ அந்த சேலையுடன் நடக்கவே சிரமப்பட்டார். ஒருவாறு வைபவம் முடிந்து சேலை மாற்றும் போது தான் அவதானித்தார் ஒரு தடைவை சுற்ற வேண்டிய சேலையை இரண்டு தடைவை சுற்றி வைத்திருந்தாள் என் தங்கை ... அதன் பின்பு அவர்கள் என் தங்கையை உதவிக்கு அழைப்பதே இல்லை .......




read more...

10/6/10

படித்ததில் பிடித்தது


பாவம் பேய்கள் !


விடிகாலை வாசல் தெளிக்கையில்
வறண்ட நாக்கு காட்டி
தண்ணீர் கேக்கும் பேய்கள்

நடுக்காட்டில் பாடிக் கொண்டு
ஓடுபவனிடம்
வெத்தலைக்கு சுண்ணாம்பு கேக்கும்
பேய்கள்

குடிகாரன் போல் கூக்குரலிட்டு
கோழிக்கறி கேக்கும் பேய்கள்

இரவு நேரங்களில் சைக்கிளில்
லிப்ட் கேக்கும் பேய்கள்

சமையல் அறை ஜன்னல் வழியே
கை மட்டும் நீட்டி
அதிரசம் கேக்கும் பேய்கள்


பயங்கரப் பேய்கள் பற்றி
பல கதைகள்

பாவம் பேய்கள்

அவை கேட்டவற்றை
கொடுத்தல் தான் என்ன ?
read more...

4/6/10

என் ஜன்னலில் ஒரு மின்னல்

வழமை போலவே அன்றும் என் அம்மாவின் சுப்ரபாதத்துடனே தொடங்கியது என் பொழுது "தவமாய் தவமிருந்து தறுதலைய பெத்திருக்கிறேன்... எல்லோருக்கும் விடிஞ்சாலும் உனக்கு மட்டும் பொழுது விடியவே விடியாது " என்றவாறே மூடியிருந்த என் அறை ஜன்னல்களை திறந்து விட்டார், சோம்பலை முறித்தபடி ஜன்னல் வழியே எதிர் வீட்டைப் பார்த்தேன்.... எதிர் வீட்டு ஜன்னலில் ஒரு நிலா புன்னகைத்து மறைந்து போனது.
நிலவொன்று புன்னகைப்பதை அன்று தான்முதன் முதலில் பார்த்தேன் அன்றோடு மாறிப் போனது என் வாழ்க்கை ஜன்னலோரமே என் வாழ்க்கையானது காலை பல் தேய்ப்பது , சாப்பிடுவது , துங்குவது என என் பொழுதுகள் ஜன்னலோடு......... காலை பத்து மணிவரை வராத என் சூரியன் தினமும் அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் எட்டிப் பார்த்தான் . அவளைப் பார்ப்பதர்க்ககவே விடிந்தன என் விடியல்கள், பல நாட்களாக வரப்படாத என் தலைக்குள் நுழைந்த சீப்பு தட்டுத் தடுமாறி முட்டி மோதி வெளிவந்தது, கரடியாய் கத்தினாலும் பல் விளக்கத பயல் தினமும் இரண்டு தடவைகள் குளிக்கிறானே என்ற அம்மாவின் அதிசயப் பார்வைகள்....எதோ ஓர் ஜந்தை பார்ப்பது போலவே பார்க்கும் அப்பாவின் கண்களிலும் ஆச்சர்யமே .... இவன் எப்படி இப்படி மாறினான் என்ற என் தங்கையின் குறு குறுப் பார்வைகள் , இவற்றை எல்லாம் தாண்டி நாட்கள் கூடதவம் இருக்கும் என்னவளின் ஒரவிழிப் பார்வைக்காக.
மெல்ல மெல்ல என் வீட்டுப் படியேறியது எதிர் வீட்டு நிலா, தேவதைகள் தரை மேலும் நடந்து வரும் என்பதை அப்போது தான் தெரிந்து கொண்டேன் , என் தங்கையும் அவளும் நன்பிகளானார்கள் அதனால் தினமும் என் வீடு வரும் நிலா, அவள் வருகையை எதிர் பாத்து வாசலுக்கும் அறைக்கும் நடந்ததில் என் வீட்டின் நடுவே ஒரு பாதையே உருவாக்கி இருந்தது... என்னை பார்க்கும் போதெல்லாம் புன்னகைத்து தலை குனிவாள் எதிரே வந்த என்னை கண்டதும் அருகில் வந்தவள் " நீங்கதான் பாதியிலேயே படிப்பை விட்டிட்டிங்க என்று அருணா சொன்னாள் ஆனா நீங்க தினமும் ஜன்னலோரம் நின்று படிச்சுக்கொண்டிருக்கிரிங்க என்ன படிக்கிறிங்க? " எனக்கு படிப்பு என் மண்டைல ஏறல்ல என்றதை போட்டுக் கொடுத்த தங்கை மீது ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது ஆனாலும் " சும்மா ஸ்டோரி புக்ஸ் " என்றேன் அசட்டு சிரிப்புடன் " ஒ அப்படியா சரி அருணா வந்த சொல்லிடுங்க" என்றவாறே மான்குட்டியாய் ஒட்டிப் போனாள் அவள் பின்னே குதித்துக் கொண்டு ஓடிய என் இதயத்தை இழுத்துப் பிடித்துக் கொண்டேன்.
இனியும் காத்திருக்காமல் அவளிடம் என் காதலை கொட்டிவிடுவது என்று அவளிற்காய் அவள் வருகைக்கக்க காத்திருந்தேன் தெரு ஓரமாய் ... என்னைக் கண்டதும் ஓடிவந்தாள் " உங்களை வீட்டில தேடினேன் " ஆஹா அவளும் என்னைப் போலவே காதலை சொல்லத்தானோ தேடி வந்தாள் அவளே சொல்லட்டும் என்று காத்திருந்தேன் " அப்பவுக்கு வேறு ஊருக்கு வேலை மாற்றலாகி வந்திருக்கு நாளைக்கு எல்லோரும் போறோம் நீங்க ஊருக்கு வந்த கட்டாயம் எங்க வீட்டுக்கு வரணும் அண்ணா" என்றாள் அண்ணாவா? கோபுரமாய் எழுந்து நின்ற என் காதல் சாம்ராஜ்யம் ஒரு நொடியில் வெடித்து சிதறிப் போனது " அப்போ நீ என்னைக் காதலிக்கவில்லையா?" ஐயோ அண்ணா நீங்கள் என்னை தப்பா புரிஞ்சிருக்கிரிங்க நான் அந்த அர்த்தத்தில உங்களோட ......... .." அதற்க்கு மேல் அவள் பேச்சைக் கேட்பதற்கு நான் அங்கு இருக்கவில்லை அண்ணா என்ற ஒரு சொல்லில் என் இதயத்தை வேரோடு வெட்டி எறிந்துவிட்டு சென்றுவிட்டாள்மீண்டும் பூட்டிக்கொண்டது என் மனக் கதவுகளோடு என் ஜன்னல் கதவுகளும்.
மீண்டும் ஆரம்பமானது என் பழைய வாழ்க்கை மீண்டும் அம்மாவின் அதே சுப்ரபாதம் ....... எருமை மாட்டின் மீது பெய்யும் மழை போலவே வீனற்றுப் போயின , சுரணை அற்றுப் போயிருந்தது மனத்தோடு உடலும் , புரண்டு புரண்டு படுத்தும் துக்கம் வரவில்லை மணி முற்பகலை தாண்டி இருந்தது தெருவில் ஏதேதோ சத்தங்கள் ஜன்னலை திறந்தேன் எதிர் வீட்டு ஜன்னலில் ஒரு மின்னல் .
read more...

29/5/10

என் காதல்


உன் கரங்களிற்குள்

சிறை போகத்தான்-நான்

ஆசை கொண்டேன்

ஆனால்

உன் நினைவுகளை மட்டுமே

என்னுள் சிறை

வைத்துக் கொள்ள

முடிந்தது....!



அன்றுமுதல்

இன்று வரை......

உன் நினைவுகள்

என் மனதில் இருந்து

சிறிதளவும் சிதறிப் போகாமல்

பொக்கிஷமாய் பூட்டியுள்ளேன்

என் இதயச் சிறையில் .....!



நீ

கல்லூரிக்கு வந்த

காலம் முதல்

உன்மேல் காதல் கொண்ட

நாட்களையும் - நான்

என் நினைவுகளில் இருந்து

கலைத்து விடவில்லை ....!



நீ பார்க்கும் போதெல்லாம்

நிலம் நோக்கும் - நீ

பாக்காத போதெல்லாம்

உன்னையே தொடரும்

என் விழிகள் ....!



உன்னை அணு அணுவாய்

அளவெடுத்து சிலையாய்

செதுக்கி நிறுத்தி வைத்துள்ளேன்

என் மனதில் ....!



எனக்கு உன் மீது

மட்டுமல்ல - உன்

பெயர் மீதும் காதல் தான்

உன் பெயரை

உச்சரிக்கும் போதெல்லாம்

ஆழ்கடல் அலை ஒன்று

அலை மோதும்

என் அடிமனதில் ....!



உன் உடை

உன் நடை , பேச்சு

உன் குறும்புத்தனங்கள்

மீதும் தீவிரமாய்

காதல் கொண்டவள் நான் ...!



படும் படாமலும்

தொட்டும் தொடாமலும் போன

உன் ஸ்பரிசங்கள்

என்றும் எனக்கு

காஷ்மீர் குளிர்மை தான் .....!



என் விடியல்கள்

ஒவ்வொன்றும்

உனக்காகவே விடிந்தன

உன்னை பார்ப்பதற்காகவே

விடிந்தன

உன் வருகைக்காகவே

விடிந்தன ...!



தினம் உன் வருகைக்காகவே

காத்திருக்கும் என்

விழிகளும் மனதும் - உன்

வருகைகள் ஒவ்வொன்றும்

எனக்கு வசந்தங்கள் ........!



அன்றும் இன்றும்

என் மனதில் நிரந்தரமாய்

குடியிருப்பது நீயும் உன்

நினைவுகளும் தான் ........!



என் மனத்தை

மொத்தமாய் உன்னிடம்

கொடுக்க முயன்ற போதெல்லாம்

ஏனோ என்னுள் தடுமாற்றம் ....

மறுத்து விடுவாயோ

என்றே மனதினுள்

புதைந்தே போனது

என் ஆசைகள் ....!



காதல்

உணர்த்தி வருவதல்ல

உணர்ந்து வருவது

உன்னால் என் காதலை

உணர்ந்து கொள்ளவும்

தெரியவில்லை

என்னால் உனக்கு

உணர்த்தவும் முடியவில்லை ....!



என் இதயத்தில்

உன்னை நிரப்பிக்கொள்ள

முடியாமல் - உன்

நினைவுகளை மட்டும்

சுமந்து நிற்கின்றேன்

இன்று ...........!



கடந்து சென்ற

கல்லூரிக் காலங்களை - நீ

நினைக்கையில்

தொலைந்து போன

முகங்களின்

முகவாரியில் சேர்ந்திருக்குமோ

என் முகம் .....!



என்றோ

ஓர் நாள் - நான்

உன்னில் காதல் கொண்டதை - நீ

அறிந்தால் அன்று

நீ சிந்தும் ஒரு

துளி விழி நீரில்

புனிதமாகும்

என் காதல் ........!
read more...

28/5/10

தபு சங்கர் கவிதைகள்.

ஆரம்பமே உங்களை சிரமத்திற்கு உள்ளாக்காமல் எனக்குப் பிடித்த கவிஞ்சர்களில் ஒருவரான தபு சங்கர் கவிதைகளுடன் ஆரம்பிக்கிறேன்...




உன் குதிக்காலை

மையமாக வைத்து

ஒரு சுற்று சுற்றி

கட்டை விரலால்

மண்ணில் நீ போடும்

அழகு வட்டத்தில்

குழந்தைகள் போனபிறகு

குடியிருப்பவன் நான்....!

உன்னை

காதலித்துக்கொண்டிருக்கும்போது

நான் இறந்து போவேனா

என்பது தெரியாது

ஆனால்

நான் இறக்கும் போதும்

உன்னைக் காதலித்துக்கொண்டிருப்பேன்

என்பது மட்டும் தெரியும் !


***************************



என் வீடு

எனக்கு பிடித்திருக்கிறது

எதிர் வீட்டில் - நீ

இருப்பதால் !


***************************



காற்றோடு

விளையடிக்கொண்டிருந்த

உன் சேலைத் தலைப்பை

இழுத்து - நீ

இடுப்பில் செருகிக்கொண்டாய்

அவ்வளவு தான்.....

நின்றுவிட்டது காற்று !


****************************



உன் வீட்டுத்

தோட்டத்தில் வைத்த

பச்சை ரகத் தென்னங்கன்று

வளர்ந்து மரமானதும்

செவ்விளநீர்

காய்த்ததாமே......

நீ

குளித்த நீரில்

வளர்ந்த மரம்

அப்படித் தானே

காய்க்கும் ...!
read more...