29/5/10

என் காதல்


உன் கரங்களிற்குள்

சிறை போகத்தான்-நான்

ஆசை கொண்டேன்

ஆனால்

உன் நினைவுகளை மட்டுமே

என்னுள் சிறை

வைத்துக் கொள்ள

முடிந்தது....!



அன்றுமுதல்

இன்று வரை......

உன் நினைவுகள்

என் மனதில் இருந்து

சிறிதளவும் சிதறிப் போகாமல்

பொக்கிஷமாய் பூட்டியுள்ளேன்

என் இதயச் சிறையில் .....!



நீ

கல்லூரிக்கு வந்த

காலம் முதல்

உன்மேல் காதல் கொண்ட

நாட்களையும் - நான்

என் நினைவுகளில் இருந்து

கலைத்து விடவில்லை ....!



நீ பார்க்கும் போதெல்லாம்

நிலம் நோக்கும் - நீ

பாக்காத போதெல்லாம்

உன்னையே தொடரும்

என் விழிகள் ....!



உன்னை அணு அணுவாய்

அளவெடுத்து சிலையாய்

செதுக்கி நிறுத்தி வைத்துள்ளேன்

என் மனதில் ....!



எனக்கு உன் மீது

மட்டுமல்ல - உன்

பெயர் மீதும் காதல் தான்

உன் பெயரை

உச்சரிக்கும் போதெல்லாம்

ஆழ்கடல் அலை ஒன்று

அலை மோதும்

என் அடிமனதில் ....!



உன் உடை

உன் நடை , பேச்சு

உன் குறும்புத்தனங்கள்

மீதும் தீவிரமாய்

காதல் கொண்டவள் நான் ...!



படும் படாமலும்

தொட்டும் தொடாமலும் போன

உன் ஸ்பரிசங்கள்

என்றும் எனக்கு

காஷ்மீர் குளிர்மை தான் .....!



என் விடியல்கள்

ஒவ்வொன்றும்

உனக்காகவே விடிந்தன

உன்னை பார்ப்பதற்காகவே

விடிந்தன

உன் வருகைக்காகவே

விடிந்தன ...!



தினம் உன் வருகைக்காகவே

காத்திருக்கும் என்

விழிகளும் மனதும் - உன்

வருகைகள் ஒவ்வொன்றும்

எனக்கு வசந்தங்கள் ........!



அன்றும் இன்றும்

என் மனதில் நிரந்தரமாய்

குடியிருப்பது நீயும் உன்

நினைவுகளும் தான் ........!



என் மனத்தை

மொத்தமாய் உன்னிடம்

கொடுக்க முயன்ற போதெல்லாம்

ஏனோ என்னுள் தடுமாற்றம் ....

மறுத்து விடுவாயோ

என்றே மனதினுள்

புதைந்தே போனது

என் ஆசைகள் ....!



காதல்

உணர்த்தி வருவதல்ல

உணர்ந்து வருவது

உன்னால் என் காதலை

உணர்ந்து கொள்ளவும்

தெரியவில்லை

என்னால் உனக்கு

உணர்த்தவும் முடியவில்லை ....!



என் இதயத்தில்

உன்னை நிரப்பிக்கொள்ள

முடியாமல் - உன்

நினைவுகளை மட்டும்

சுமந்து நிற்கின்றேன்

இன்று ...........!



கடந்து சென்ற

கல்லூரிக் காலங்களை - நீ

நினைக்கையில்

தொலைந்து போன

முகங்களின்

முகவாரியில் சேர்ந்திருக்குமோ

என் முகம் .....!



என்றோ

ஓர் நாள் - நான்

உன்னில் காதல் கொண்டதை - நீ

அறிந்தால் அன்று

நீ சிந்தும் ஒரு

துளி விழி நீரில்

புனிதமாகும்

என் காதல் ........!
read more...

28/5/10

தபு சங்கர் கவிதைகள்.

ஆரம்பமே உங்களை சிரமத்திற்கு உள்ளாக்காமல் எனக்குப் பிடித்த கவிஞ்சர்களில் ஒருவரான தபு சங்கர் கவிதைகளுடன் ஆரம்பிக்கிறேன்...




உன் குதிக்காலை

மையமாக வைத்து

ஒரு சுற்று சுற்றி

கட்டை விரலால்

மண்ணில் நீ போடும்

அழகு வட்டத்தில்

குழந்தைகள் போனபிறகு

குடியிருப்பவன் நான்....!

உன்னை

காதலித்துக்கொண்டிருக்கும்போது

நான் இறந்து போவேனா

என்பது தெரியாது

ஆனால்

நான் இறக்கும் போதும்

உன்னைக் காதலித்துக்கொண்டிருப்பேன்

என்பது மட்டும் தெரியும் !


***************************



என் வீடு

எனக்கு பிடித்திருக்கிறது

எதிர் வீட்டில் - நீ

இருப்பதால் !


***************************



காற்றோடு

விளையடிக்கொண்டிருந்த

உன் சேலைத் தலைப்பை

இழுத்து - நீ

இடுப்பில் செருகிக்கொண்டாய்

அவ்வளவு தான்.....

நின்றுவிட்டது காற்று !


****************************



உன் வீட்டுத்

தோட்டத்தில் வைத்த

பச்சை ரகத் தென்னங்கன்று

வளர்ந்து மரமானதும்

செவ்விளநீர்

காய்த்ததாமே......

நீ

குளித்த நீரில்

வளர்ந்த மரம்

அப்படித் தானே

காய்க்கும் ...!
read more...

25/5/10

என் அட்டகாசம் ஆரம்பம்

இன்று முதல் நானும் ஒரு வலைப் பதிவராக உங்களோடு வலம்வரப் போகிறேன்.  உங்கள் ஆதரவு எனக்கும் இருக்கும் என்ற நம்பிக்கையோடு. இந்த வலைப் பதிவு முலம் பல்வேறுபட்ட விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள இருக்கின்றேன்.
read more...