27/6/10

என்னை என்ன செய்தாய்?


நான் நானாக தான்
இருந்தேனே எப்போது
என்னை நீயாக
மாற்றினாய் ?


என்னை என்ன செய்தாய்
எப்போதும் என் நினைவுகள்
உன்னை சுற்றியே
வருகின்றன

விலகி நிற்க நினைக்கிறேன்
முடியாமல்
மீண்டும் மீண்டும்
மனம் உன்னையே தேடுகிறதே
என்னை என்ன செய்தாய்?


மறந்து போனேன்
என்னை நானே
தொலைந்து போனேன்
எனக்குள் நானே ...
தேடித் தேடிப் பார்த்தேன்
கிடைத்தது
நானல்ல நீ தான்
என்னை என்ன செய்தாய் ?

பசி மறந்தேன்
உறக்கம் மறந்தேன்
இரவின் நீளம் சுமையானது
பகலில்
நேரம் போதவில்லை
உன்னை நினைப்பதற்கு ....
என்னை என்ன செய்தாய் ?

உன் பெயரை மட்டும்
திரும்ப திரும்ப
சொல்லிப் பார்த்து
மனம் தித்திக்கிறதே
உன் பெயரை சொல்லி
என்னை யாராவது அழைக்க
மனம் விரும்புகிறதே
என்னை என்ன செய்தாய் ?

விழித்துக் கொண்டே
தூங்குகிறேன்
விழிகள் இருந்தும்
பார்வை அற்றவள் ஆனேனே
என்னை என்ன செய்தாய் ?

என் இதயத்தில்
ஊஞ்சல் போட்டு ஆடிக்கொண்டிருப்பது
நீயும் உன் நினைவுகளும்
மட்டும் தான்

என்னை என்ன செய்தாய்
சொல் என்னை

என்ன செய்தாய் ?
















Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

5 கருத்துகள்: on "என்னை என்ன செய்தாய்?"

http://rkguru.blogspot.com/ சொன்னது…

///என் இதயத்தில்
ஊஞ்சல் போட்டு ஆடிக்
நீயும் உன் நினைவுகளும்
மட்டும் தான்/// -அட்டகாசமான வரிகள்....வாழ்த்துகள்

சசி சொன்னது…

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ....rk guru

அன்புடன் மலிக்கா சொன்னது…

தாங்களை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்கள்.
http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_06.html

பெயரில்லா சொன்னது…

//என்னை என்ன செய்தாய்
சொல் என்னைஎன்ன செய்தாய் ?//

இன்னும் இதற்கு விடை தெரியாமல் தான் நானும்..கவிதை காதலின் உணர்வை பிரதிபலிக்கிறது சசி..

Jawid Raiz (ஜாவிட் ரயிஸ்) சொன்னது…

////மறந்து போனேன்
என்னை நானே
தொலைந்து போனேன்
எனக்குள் நானே ...
தேடித் தேடிப் பார்த்தேன்
கிடைத்தது
நானல்ல நீ தான்
என்னை என்ன செய்தாய் ?////

அருமையான கவிதை தோழி. அன்பு வாழ்த்துக்கள்