10/6/10

படித்ததில் பிடித்தது


பாவம் பேய்கள் !


விடிகாலை வாசல் தெளிக்கையில்
வறண்ட நாக்கு காட்டி
தண்ணீர் கேக்கும் பேய்கள்

நடுக்காட்டில் பாடிக் கொண்டு
ஓடுபவனிடம்
வெத்தலைக்கு சுண்ணாம்பு கேக்கும்
பேய்கள்

குடிகாரன் போல் கூக்குரலிட்டு
கோழிக்கறி கேக்கும் பேய்கள்

இரவு நேரங்களில் சைக்கிளில்
லிப்ட் கேக்கும் பேய்கள்

சமையல் அறை ஜன்னல் வழியே
கை மட்டும் நீட்டி
அதிரசம் கேக்கும் பேய்கள்


பயங்கரப் பேய்கள் பற்றி
பல கதைகள்

பாவம் பேய்கள்

அவை கேட்டவற்றை
கொடுத்தல் தான் என்ன ?

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

3 கருத்துகள்: on "படித்ததில் பிடித்தது"

பனித்துளி சங்கர் சொன்னது…

பேய்களின் உணர்வுகளுக்கு ஒரு கவிதை . அருமை . பகிர்வுக்கு நன்றி

GEETHA ACHAL சொன்னது…

பேய்களுக்கும் மனசு இருக்கின்றதா....அருமை...சூப்பர்ப்...

பெயரில்லா சொன்னது…

நீங்கள் பேய்களின் உணர்வுகளை மதிக்கின்றீர்கள் போல... "பாம்பின் கால் பாம்பறியும்".. பெயர் குறிப்பிடா அதே வாசகி கனடாவில் இருந்து.. :))